Saturday, February 25, 2012

தோழிக்கு தொலைதூரமான ஒரு நட்பின் கடிதம்


கண்கள் சொல்லும் சோகத்தை

சொல்லாமல் அறிவாய் நீ

முன்ஜென்மத்தில் என் தாய் நீ

இந்த ஜென்மத்தில் என் தோழியாய்

உன்னுடைய அழைப்புகள் வராதா

என எங்கும் மனங்களின் வரிசையில்

இப்போது நானும் காத்திருக்கிறேன்

எப்போதாவது பேசுகிறாய்

எப்படி மறந்து போகிறாய்

அழைக்க சில நேரம் மறந்தும் போகிறாய்

அப்போதும் உன் நட்பு தேடியே

காத்திருக்கும் என் மனம்

நிஜமாய் உனக்கு மனம் வருந்தும் போது

என் வாசல் தேடி வா

அதே நட்பின் தோள் கொண்டு காத்திருக்கிறேன்

நீ அறுதல் கொள்ள

உன் நண்பனாய் என்றும்

உன் நட்புடன் என்றும்

தொலைக்காதே நட்பின் முகவரியை

அது பறித்துவிட போகிறது

உன் புன்னகையை.

  நன்றி - ருத்ரன்
 

No comments:

Post a Comment